/* */

சீர்காழி அருகே கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

சீர்காழி அருகே புறவழிச்சாலையில் கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

சீர்காழி அருகே கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
X
சீர்காழி அருகே புறவழிச்சாலையில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலை வழியாக திண்டிவனம் பகுதியில் இருந்து கருங்கல் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி லாரி சென்றது. இந்த லாரியை காரைக்கால் பகுதியை சேர்ந்த வேலு பிரபாகரன் (22 )என்பவர் ஓட்டிச் சென்றார்.இந்த லாரி சீர்காழி புறவழிச்சாலையில் பனமங்கலம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் கட்டையில் மோதி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்த விபத்தில் லாரியில் இருந்த கருங்கல் ஜல்லிகள் சுமார் 50 அடி தூரத்திற்கு பலத்த சப்தத்துடன் சிதறி கொட்டியது. சப்தம் கேட்டு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்தில் ஓட்டுனர் வேலுபிரபாகரன் படுகாயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 April 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!