/* */

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

HIGHLIGHTS

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த 3 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.

பூம்புகார் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், சீர்காழி தொகுதியில் திமுக சார்பில் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் இருந்து பேரணியாக வந்து கலந்துகொண்டனர்.

Updated On: 9 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு