/* */

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1073 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சீர்காழி தனிதொகுதியாகவும், மற்றவை பொதுதொகுதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் வாக்குசாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் 1073 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 42 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-திபோத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 91 பேர் மயிலாடுதுறை மாவட்ட போலீசார், ஊர்காவல்படை தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாதா தெரிவித்தார்.

Updated On: 7 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...