Begin typing your search above and press return to search.
மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தமிழர் உரிமை இயக்கத்தினர் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்க போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாதததை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழர் உரிமை இயக்கத்தினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.