/* */

தமிழகத்தில், இன்னும் 3 நாட்களுக்கு மழை கொட்டும்

Rain For Next 3 Days -வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்னும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில், இன்னும் 3 நாட்களுக்கு மழை கொட்டும்
X

தமிழகத்தில், வரும் 16ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்.

Rain For Next 3 Days -தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில், லேசான மழைப்பொழிவு இருந்தது. அதன்பின், மழை அளவு அதிகரித்தபடி இருக்கிறது. இந்நிலையில், வங்க கடலில் கடந்த 10-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாக வலுப்பெற்றதால், அதிகமாக கனமழை பெய்தது.

குறிப்பாக, சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை பதிவாகி, அந்த ஊரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விடாது மழை கொட்டியது. சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று அதிகாலை வேளையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. மழையுடன் காலைப்பொழுது விடிந்தாலும், 10 மணிக்கு மேல் வெயில் லேசாக எட்டிப் பார்த்தது. அதன்பின், வானம் மேகமூட்டத்துடன் இருப்பதும், அவ்வப்போது லேசான தூறலுமாக மழை கண்ணா மூச்சி காட்டியது.

இந்நிலையில் கேரள, தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குனர் செந்தாமரைகண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழக, கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14-ம் தேதி (இன்று) முதல் 16-ந் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14-ந் தேதி (இன்று) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல 16-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீச வாய்ப்புண்டு. 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருத்தணியில் 13 செ.மீ., கொடுமுடியில் 12 செ.மீ., மதுராந்தகம், திண்டிவனத்தில் தலா 11 செ.மீ., சூளகிரி, ஆலங்காயம், நாட்றம்பள்ளியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னார் அணை, ஊத்துக்கோட்டை, கொடைக்கானல், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், சின்னக்கல்லார், வல்லம் போன்ற பகுதிகளிலும் பரவலான மழை பதிவாகி இருக்கிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Nov 2022 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  3. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  4. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  5. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  6. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  7. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  8. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!