/* */

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை வானிலை நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை:  பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

வானிலை ஆய்வு மைய படம்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் சென்னை, அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காலை 8.30 மணிக்கு சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று மாலை) தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வட தமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும். இந்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை நீடிப்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Nov 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...