/* */

ஆக்சிஜன் வேணுமா? கூப்பிடுங்க 104-ஐ தமிழக அரசு அறிவிப்பு

ஆக்சிஜன் தேவைக்கு 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது.அதற்கு அவசர எண் 104 அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆக்சிஜன்  வேணுமா? கூப்பிடுங்க 104-ஐ   தமிழக அரசு அறிவிப்பு
X

அவசர உதவி எண் :104

ஆக்சிஜன் இலகுவாக கிடைப்பதை உறுதி செய்யவும், சிக்கல்களை தீர்க்கவும் 24 மணி நேரமும் செயல்படும் ஆக்சிஜன் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது. அதற்கான உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர எண் 104

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனை, நர்சிங் ஹோம் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில், மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும்படி கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் இலகுவாக கிடைப்பதற்கு, மருத்துவ ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளுக்கு சென்று சேர தேவைப்படும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்திக்கும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உதவிக்கு உடனடியாக 104 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 April 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!