/* */

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

அரசு அறிவித்தபடி இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
X

லாக்டவுன் மாதிரி படம் 

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10மணி முதல் அதிகாலை காலை 4மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்க இம்மாதம் 30ம் தேதி நள்ளிரவு வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் இன்று இரவு 10மணி முதல் அதிகாலை காலை 4மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படஉள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. இந்த தடை அனைத்து நாட்களுக்கும் பொருந்தும். அனைத்து கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 21 April 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?