/* */

ஃபோனில் பேசிய ரஜினி... நெகிழ்ந்து போன ஸ்டாலின்: காரணம் இதுதான்!

'உங்களில் ஒருவன்' நூலை படித்து தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஃபோனில் பேசிய ரஜினி... நெகிழ்ந்து போன ஸ்டாலின்: காரணம் இதுதான்!
X

கோப்பு படம் 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சிறுவயது காலம், கல்லூரி காலம் அரசியலில் நுழைந்தது, கலைத்துறை அனுபவம், மிசா நடவடிக்கையில் சிறை சென்ற அனுபவம் உள்ளிட்ட அனுபவங்களை, சுயசரிதையாக எழுதி உள்ளார்.

இந்த நூல், 'உங்களில் ஒருவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 28 ஆம் தேதி, சென்னையில் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நூலை, நடிகர் ரஜினிகாந்த் படித்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டினார்.

இந்த நிலையில், பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், "'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!" என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 24 March 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை