/* */

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
X

பைல் படம்.

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதோடு, வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக கலையரசி நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனராக சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை ஆணையராக அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனராக உமாஷங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் செயலாளராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை துணை இயக்குனராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை துணை செயலாளராக பத்மஜா-வை நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 10 July 2023 8:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்