/* */

ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம்- அதிமுக தலைமை வேண்டுகோள்

ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம்- அதிமுக தலைமை வேண்டுகோள்
X

அதிமுக.,வை காக்க தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளனர். மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ல் தொண்டர்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், உயிர்மூச்சுள்ளவரை ஜெயலலிதா வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன். இது ஜெயலலிதா மீது ஆணை, என்ற உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கோட்டையில் நம் கொடியை உயர பறக்க செய்வோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 22 Feb 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!