/* */

இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: பேரவை துணைத்தலைவர் வழங்கினார்

இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பேரவை துணைத்தலைவர், மழைநீர் தேங்கியபகுதிகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்

HIGHLIGHTS

இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: பேரவை துணைத்தலைவர் வழங்கினார்
X

கீழ்பென்னாத்தூர் தொகுதி தள்ளாம்பாடி எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு பகுதி மற்றும் பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி,வழங்கினார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு அளித்த மக்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து சான்றிதழ்களை வழங்கினார்.

வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் தெரு மற்றும் நேரு தெருவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி வேளானந்தல் கிராமத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமினை நேரில் சென்று பார்வையிட்டார்.

Updated On: 4 Dec 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  5. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  6. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை