/* */

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு கவுன்சிலர்

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை வார்டு கவுன்சிலர் தீர்த்து வைத்துள்ளார்.

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு கவுன்சிலர்
X

சோழவந்தானில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி பழுதடைந்து 30 நாட்களுக்கு மேலாகியும், சரி செய்யாததால் குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடுமையான வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் முப்பது நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இதுகுறித்து 8வது வார்டு பொதுமக்கள் வார்டு கவுன்சிலரான மருது பாண்டியனை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

உடனடியாக 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பழுதடைந்த சின்டெக்ஸ் அடியில் உள்ள மோட்டார் பம்பினை வெளியில் எடுத்து சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் இது போன்ற குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. பல இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீரில் மஞ்சள் கலந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் பொது மக்களின் கோரிக்கைக்கு முறையாக பதிலளிக்க மறுக்கிறார்கள். ஆகையால் வார்டு கவுன்சிலரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன் பின்பு பழுது அடைந்த சின்டெக்ஸை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Updated On: 30 April 2024 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது