Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் நேற்று 71 பேர் கொரோனாவிலிருந்து நலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 88 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 71 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 939 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,280 ஆகவும், இதில் 1,11,577 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1764 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.