திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் புத்தகத் தின விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
ஆரணி கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் ஆரணி சைதாப்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முதன்மை விருந்தினராக ரோட்டரி சாலை பாதுகாப்புத் தலைவா் பழனி கலந்து கொண்டாா்.
மேலும், சிறப்பு விருந்தினராக மேற்கு ஆரணி வட்டாரக் கல்வி அலுவலா் அருணகிரி கலந்து கொண்டு, புத்தகம் வாசித்தலின் அவசியம் பற்றிக் கூறி மாணவா்களுக்கு புத்தகம், கணித உபகரணப் பெட்டி, எண் சுவடி, நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா்.
மேலும், மருசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒலிபெருக்கி, ஒலிவாங்கி (மைக்) வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) உலகநாயகி வரவேற்றாா். ரோட்டரி சங்கச் செயலா் குமாா், பொருளாளா் ஸ்ரீதா், மருசூா் பள்ளித் தலைமை ஆசிரியை உஷாராணி, ஆசிரியா்கள் அன்பு, தினகரன், மகேஸ்வரி, சீதா, கணபதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள்ள முழுநேர நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தினவிழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் அப்துல்காதா், பேரூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினா் அப்துல்வாகித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் நேதாஜி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி மேலாளா் கோவிந்தராஜ் கலந்துகொண்டு பேசினாா்.
பின்னா் நூலகத்தில் அதிக நேரம் வாசிப்புத் திறனில் ஆா்வம் உள்ளவா்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் இலவச புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி கிளை நூலகத்தில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் மற்றும் கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற புத்தக தின விழாவுக்கு நூலகா் சத்யநாராயணன் தலைமை வகித்தாா்.
பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் சீனிவாசன் வரவேற்றாா்.
வந்தவாசி வட்டாட்சியா் பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், நூலகப் பயன்பாட்டின் அவசியம் குறித்தும் பேசினாா்.
மேலும் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் வாசு, எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் சதானந்தன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
உடன் ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன், நூலகத்தின் கெளரவத் தலைவா் முருகமணி, ஆசிரியா்கள் லோகானந்தம், வெங்கடேசன், சுந்தரவிநாயகம், அரங்கமணிமாறன், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நூலகா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.