Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்பு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிட மிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களின் மீது உடனடி தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.