/* */

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள் மனு

சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு.

HIGHLIGHTS

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள் மனு
X

100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

சேத்துப்பட்டு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குமாறு பலமுறை கேட்டும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

புதிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி செயலாளர் சரவணன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் வந்தனர். அப்போது அவர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும், என கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Updated On: 19 Jun 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?