/* */

பொது மக்களிடையே மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி

மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

பொது மக்களிடையே மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி
X

மஞ்சப்பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி ,சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக பொது மக்களிடையே மஞ்சப்பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மஞ்சப்பை உபயோகிக்கும் நிகழ்வினை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார்.

தொடர்ந்து மஞ்சள் பை உபயோகிப்பதன் அவசியம் , நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர் விளக்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...