/* */

செய்யாறு பஸ் நிலையத்தில் பரபரப்பு: இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் செய்யாறு பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறு பஸ் நிலையத்தில் பரபரப்பு: இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
X

சாலை விபத்தில் பெண் பலியானதை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அரசு போக்கவரத்து கழக நிறுவனம் நஷ்டஈடு வழங்காததால் செய்யாறில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனஜா, கூலித் தொழிலாளி. இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்றுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

ஞானமுருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்களுக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் அந்த இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. அதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் சார்பு நீதிமன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறைவேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ மனுதாரர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் இன்று செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த பஸ் நிலையம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 24 March 2023 9:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?