/* */

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

HIGHLIGHTS

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  நபர்கள் குண்டர் தடுப்பு  காவல் சட்டத்தில் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தாராப்பட்டு கிராமம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 1) பாதுஷா 2) சையத்கோஸ் 3) இமாம் (எ) நிஜாமுதின் 4) சபியுல்லா ஆகிய நான்கு நபர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, அதே ஊரைச் சேர்ந்த ஷேக் காசிம் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக, அவரது மகள் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில், மேல் செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து மேற்கண்ட நான்கு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 1 Sep 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு