/* */

ஆரணியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

விழுப்புரத்தில் இருந்து காட்பாடிைய நோக்கி சென்ற சரக்கு ரயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானார்.

HIGHLIGHTS

ஆரணியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
X

ரயிலில் அடிபட்டு பலியான ராஜாராமன்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ரோடு ரயில் நிலைய தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. தகவலை அறிந்து களம்பூர் நால்வர் தெருைவச் சேர்ந்த சாவித்திரி என்பவர் அப்பகுதிக்கு சென்று பார்த்தார். ரயிலில் அடிபட்டு பலியானவர் தனது கணவர் ராஜாராமன் (வயது 50) என்பதை உறுதி செய்து கதறினார். நேற்று இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடிைய நோக்கி சென்ற சரக்கு ரயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானதாக தெரிய வருகிறது.

காட்பாடி ரயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அவர், கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிந்துள்ளார். அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இந்நிலையில் ஆரணி ரோடு ரயில் பாதையில் அடிபட்டு பலியாகியது தெரிய வந்துள்ளது.

Updated On: 27 Aug 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!