/* */

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்

இன்று முழு ஊரடங்கையொட்டி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்
X

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கணேசன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முழு ஊரடங்கின்போது மது பாட்டில்களை பதுக்கி சிலர் விற்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், பழனிவேல், ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது ராட்டினமங்கலம் கிராமத்தில் அரிசி ஆலை தொழிலாளி கணேசன் (வயது 45) என்பவருடைய வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக கணேசன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 35 பீர் பாட்டில்கள், 250 குவார்ட்டர் பாட்டில்கள் என ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 285 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை