/* */

பழவேற்காட்டில் படகு மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியின் போது படகில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பழவேற்காட்டில் படகு மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூனங்குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது படகு ஒன்றில் தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து படகு மூலமாக ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசியை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சிறிய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிற்கு படகு மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற படகு உரிமையாளர், கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On: 26 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்