/* */

லாரியில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் ராசிபுரம் அருகே கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, கர்நாடகாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

லாரியில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் ராசிபுரம் அருகே கைது
X

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வெண்ணந்தூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் அவ்வழியாக வந்த முட்டை லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், லாரியில் 48 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மறைத்து வைத்து, கடத்தி வந்தது ண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரித்த போது, அவர் நாமக்கல் அருகே உள்ள ஏளுர் பகுதியை சேர்ந்த சேகர் (40) என்பதும், விற்பனை செய்வதற்காக, பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சேகரை கைது செய்தனர். மேலும் 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 25 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு