Begin typing your search above and press return to search.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 34). இந் நிலையில் இவரது தாய் கடந்த 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. மனவேதனையில் இருந்து வந்த கோபாலகிருஷ்ணன் வீட்டில் ஒரு அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.