/* */

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்.,29) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்.,29) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பைல் படம்).

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை(சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதன்படி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுத்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருகை தர உள்ளார்.

பெருந்துறையில் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களுக்கு நாளை மாலை 4 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காந்திசிலை, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணியளவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதில், மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு கழக நிர்வாகிகள், ஊர்கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் துணை அமைப்புகளின் நிர்வாகிகள். உள்ளாட்சி, கூட்டுறவு பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 28 April 2023 12:24 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...