/* */

சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால நிவாரணம்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி சம்பவத்தில் விவசாயிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால நிவாரணம்
X

பலியான ஆடுகள்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உடபட் கேம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி, விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இவர் வளர்த்து வந்த 7 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. மேலும் 3 ஆடுகளை கவ்வி சென்றது. இந்த பெரும்பள்ளம் சிறுத்தை அணை பகுதியில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்றம் சங்கம் சார்பில் விவசாயி தங்கசாமிக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இடைக்கால நிவாரணமாக ஒரு ஆட்டுக்கு ரூ.1000 வீதம் 7 ஆடுகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கும் பணி நடந்து வருகிறது.விவசாயிகள் யாரேனும் இதுபோல் விலங்குகளால் தாக்கி தங்கள் கால்நடைகள் உயிரிழந்தால் இடைக்கால நிவாரணம் கிடைக்க தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்றம் சங்கத்தைச் சேர்ந்த நமேஸ் என்பவரின் செல்போன் 8838332124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்