/* */

சிவகாசி அருகே ஊருணி தூர்வார பூமி பூஜை

சிவகாசி அருகே ரூ.61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணி சிறுவர் பூங்கா, நடைமேடை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது

HIGHLIGHTS

சிவகாசி அருகே ஊருணி தூர்வார பூமி பூஜை
X

பூமி பூஜையில்  பங்கேற்ற மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்

சிவகாசி அருகே ரூ.61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணி சிறுவர் பூங்கா, நடைமேடை அமைக்க பூமிபூஜை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் செல்லியாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகேயுள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போன நிலையில் உள்ளது. இந்த ஊருணியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று, இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஊருணியை தூர்வாருவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செல்லியாரம்மன் ஊருணியை தூர்வாரி, அந்தப் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் ஊருணியை சுற்றி நடைமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டது. சுமார் 61 லட்சம் ரூபாய் செலவில் ஊருணி தூர்வாரும் பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் அழகுமயில் பொன்சக்திவேல், குருசாமி மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு