/* */

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகன் கைது

பட்டாசு ஆலையின் உரிமையாளரின் மகன் சிதம்பரத்தை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பட்டாசு ஆலை வெடி விபத்தில்  ஆலை உரிமையாளரின் மகன் கைது
X

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து வழக்கில் ஆலை உரிமையாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (57). இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, சோலைவிக்னேஷ் (26) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்து குறித்து அம்மாபட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன், அவரது மகன்கள் ராமச்சந்திரன் (34), சிதம்பரம் (31), மணிகண்டன் (28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் இவர்களை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்