/* */

வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வந்தவாசியில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வந்தவாசியில் பெண்ணிடம் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

பைல் படம்.

வந்தவாசி பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி கனிமொழி, இவர் இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்துவிட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கனிமொழி அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றனர்.

இதே போல வீட்டை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த சென்னாபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேலு, யுவராஜ் ஆகியோரது வீடுகளில் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜானகிராமனின் வீட்டில் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றபோது அவர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். நேற்று நள்ளிரவில் மட்டும் மூன்று வீடுகளில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 May 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!