/* */

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. 63 நாயன்மார்கள் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தீபத் திருவிழா.. 63 நாயன்மார்கள் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு...
X

63 நாயன்மார்கள் வீதி உலாவில் பங்கேற்றோர்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழாவில், உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும், அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறும்.

சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார் என்பதாலேயே, தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வது உண்டு.

திருவிழாவின் பத்தாம் நாளான அதிகாலை 4 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். அந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும், ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படும். பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைப்பார்கள். அதன்பிறகு, கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பார்ப்பது வழக்கம்.

அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடப்பு ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

6 ஆவது நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம், வெள்ளி யானை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களும் மாட வீதியில் பவனி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 Dec 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...