Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை தாமரை குளத்தில் தை மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி
திருவண்ணாமலை அண்ணாலையால் கோயில் தாமரை குளத்தில் தை மாதப் பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரிநடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று தை மாதப் பிறப்பை முன்னிட்டு உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இன்று காலை அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு தாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று. அண்ணாமலையார் குமரகோவில், காமாட்சியம்மன் கோயில்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்பு மாடவீதி வலம் வந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளினார். குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டும் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர்.