/* */

திருவண்ணாமலை: 21லட்சம் வாக்காளர்கள் -பெண் வாக்காளர்களே அதிகம்

திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு: ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: 21லட்சம் வாக்காளர்கள் -பெண் வாக்காளர்களே அதிகம்
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்,  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2022-ந்தேதியை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான முருகேஷ் வெளியிட்டார்.

அதை, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,01,530 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 20 லட்சத்து 77 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னர் நடந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் 51 ஆயிரத்து 558 படிவங்கள் பெறப்பட்டு புதிதாக 32 ஆயிரத்து 270 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இறந்தோர், இடம் பெயர்ந்தோர் மற்றும் இருமுறைப் பதிவு என 8 ஆயிரத்து 938 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்தப் பகுதி வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்து கொள்ளலாம். இந்த வாக்காளர் பட்டியலில் தகுதியுடைய நபர்கள் விடுபட்டு இருப்பின் அதாவது 1.1.2004 வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க படிவம் 6 சமர்பித்து பெயரை பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று 12-வது தேசிய வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் தின விழாவில் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 Jan 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...