/* */

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரவிச்சந்திரன். இவர் வேங்கிகால் செல்வா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். காலை அனைவரும் வீட்டிற்கு வந்தனர் அப்போது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள், இரண்டு கிலோ வெள்ளி, மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் இவைகளை திருடர்கள் திருடி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டும், வழிப்பறி சம்பவமும் நடைபெற்று உள்ளது. இதனால் வீட்டை பூட்டி விட்டு மக்கள் வெளியூர் செல்வதற்கு மிகவும் அச்சம் அடைகின்றனர். இதனால் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் சென்று வெளியூர் செல்கிறோம் என்று தகவல் அளிக்க வேண்டும் என்றும்,மேலும் நேரில் சென்று தகவல் அளிக்க முடியவில்லை என்றால் ஹாலோ திருவண்ணாமலை என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்தால் 9988576666 ரோந்து பணியில் செல்லக்கூடிய காவல்துறையினர் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று வருவார்கள் என்று தெரிவித்தார்.

Updated On: 1 July 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?