/* */

உரத் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

யூரியா உரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

உரத் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உர தட்டுபாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ஆகஸ்டு மாதம் பெய்த மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 40 நாட்கள் ஆகிறது. தற்போது திட யூரியாவிற்கு மாற்றாக திரவ யூரியா ஏக்கருக்கு ரூ.800 என 3 முறை தெளிப்பதால் கூடுதல் செலவாகிறது. எனவே யூரியா உர தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 5 Oct 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...