/* */

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 35, ஆகிய 36 பதவி இடங்களை நிரப்புவதற்கு தேர்தல் கால அட்டவணை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 20.6.22 முதல் 27.6.22 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகின்றது. வேட்புமனு பரிசீலனை 28 ம் தேதி அன்று நடைபெறும். 30 ஆம் தேதி அன்று பிற்பகல் மூன்று மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

பதிவான வாக்குகளில் எண்ணிக்கை 12 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நன்னடத்தை விதிகள் தேர்தல் முடிவு வரும் நாளான 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!