/* */

கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்

தங்க கொடி மரம் முன்பு அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்க, அண்ணாமலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.

HIGHLIGHTS

கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்
X

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை மகாதீப திருவிழா, பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் தீபத்தை காண பல மாவட்டங்களில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் படையெடுத்து வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலே கிரிவலம் தொடங்கிய பக்தர்கள் இன்று அதிகாலை பரணி தீபம் பார்ப்பதற்காக அண்ணாமலையார் கோயிலின் முன்பு குவிந்தனர்.

கோயிலை அலங்கரிக்கும் பணி

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலை அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மலர்கள் வரழைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி முன்பு 2-ம் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்கள், கரும்பு மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டன.

தங்க கொடி மரம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் வாழை மரம் மற்றும் தென்னங்கீற்று கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. மேலும் முகப்பு பகுதியில் சிவலிங்கம் மற்றும் 2 நந்திகளை தத்ரூபமாக வடிவமைத்து மலர்களைக் கொண்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது.


இதேபோல், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் மகா தீப தரிசன மண்டபமும் தென்னங்கீற்றுகளை கொண்டு பின்னப்பட்ட தட்டுகள் மற்றும் தோரணங்கள் மூலமாக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு உள்ள மண்டபமும் மலர்களால் அலங்கரித்து ரம்மியமாக காட்சி கொடுக்கிறது.அனைத்து சன்னதிகளும் வாழை மரங்கள், மலர்கள் மற்றும் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிளிகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் முன்பு வாழைமரங்கள் மற்றும் தென்னங்கீற்றுகள் மற்றும் இளநீர் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

2700 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகளும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பேருந்துகளும், புதுச்சேரி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பேருந்துகளும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பேருந்துகளும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை சென்று மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக வரும் 7ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம், தாம்பரம், புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை 8ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா்த்திகை மாதப் பெளா்ணமி

காா்த்திகை மாதப் பெளா்ணமி புதன்கிழமை (டிச.7) காலை 8.35 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (டிச.8) காலை 9.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Updated On: 5 Dec 2022 11:59 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!