/* */

மகளிர் விடுதிகள் முறையான அனுமதியுடன் செயல்பட கலெக்டர் வேண்டுகோள்

மகளிர் விடுதிகள் அரசின் முறையான அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

மகளிர் விடுதிகள் முறையான அனுமதியுடன் செயல்பட கலெக்டர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

பள்ளி, கல்லூரி மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அரசின் முறையான அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

தனியார் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை 2014-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் கீழ் அரசின் முறையான உரிமம் பெற்று மட்டுமே செயல்பட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை மேற்தெரிவித்த விதியின் கீழ் அரசின் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

இதுநாள் வரை அரசின் அனுமதி பெறாத பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை http://tnswp.com என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பித்த வருகிற 31-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இணையதள முகவரியில் விண்ணப்பம் அளிப்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்தல் அல்லது உரிமம் பெறுதலில் சந்தேகம் அல்லது உதவி ஏதேனும் தேவைப்படுபவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

வருகிற 31-ந் தேதிக்குள் உரிமம் பெறாத தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படாது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி சீல் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 Aug 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!