/* */

பாலியல் வன்கொடுமை வழக்கில் வங்கி உதவியாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Tiruvannamalai News Today -சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை வழக்கில் வங்கி ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

பாலியல் வன்கொடுமை வழக்கில் வங்கி உதவியாளருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்.

Tiruvannamalai News Today -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாரதியார் தெரு பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி 11 வயதுடைய ஒரு சிறுமி கடைக்கு சென்றாள். அப்போது அந்த சிறுமியை மூர்த்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார்.

கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடி சென்றனர். அப்போது அழுதபடி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட மூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மூர்த்தியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு