/* */

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அண்ணாமலையார்   கோவிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை
X

அண்ணாமலையார் கோவில் (பைல் படம்)

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று கோயில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டது. பின்னர் கோயில் அதிகாரிகள் தெரிவித்த தொகையானது ரூ.1 கோடியே 29 லட்சத்து 13 ஆயிரத்து 957-ம், 290 கிராம் தங்கம், 1 கிலோ 90 கிராம் வெள்ளி உண்டியலில் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Jun 2022 1:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்