Begin typing your search above and press return to search.
கலசப்பாக்கத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பற்றிய செயல்முறை நடைபெற்றது. கரையாம் பாடி செய்யாற்றில் அமைக்கப்பட்டு தடுப்பணையில், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலமாக, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றுவது எப்படி என்பதை செயல் வடிவமாக தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில், தீயணைப்புத்துறை அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் , வருவாய் துறையை சார்ந்த வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.