Begin typing your search above and press return to search.
பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளை அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழும் தூய்மைப் பணியாளர் களுக்கு ரூபாய் 20 லட்சத்தில் தளவாட பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று தூய்மைப் பணியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.