தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு நோட்டீஸ்

தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு திருவண்ணாமலை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தன்னிச்சையாக செயல்பட்ட செய்யாறு துணை ஆட்சியருக்கு நோட்டீஸ்
X

பைல் படம்

செய்யாறு தாலுகா இளநீர் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் திலகவதி. கணவர் இறந்த நிலையில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார்.

திலகவதியின் தந்தை 1971-ம் ஆண்டு இறந்துள்ளதால் அப்போது இறப்பு குறித்து பதிவு செய்யப்படவில்லை. அதனைத்தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்க கோரியபோது சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

தாசில்தார் அலுவலகத்திற்கும் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து திரிந்த திலகவதி தாலுகா அலுவலகத்தில் தனது மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தன்னிடம் இருந்த தாலி மற்றும் கம்மல் ஆகியவை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்யாறு தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோருடன் சப்- கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தினார்.

பின்னர் தலைமை இடத்து துணை தாசில்தார் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா உத்தரவிட்டார். மேலும் திலகவதியிடம் அவரது தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவின் பணியிடை நீக்க உத்தரவினை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் ரத்து செய்துள்ளார்.

மேலும் தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசனின் பணியிடை நீக்க உத்தரவு தொடர்பாக செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிற்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெங்கடேசன் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையின்படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2 ஆண்டு தாசில்தார் பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். அவரது பணியில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறிந்து இருப்பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரை கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

மேலும் கலெக்டர் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பாமல் தன்னிச்சையாக அவரை பணியிடை நீக்கம் செய்தது குறித்தும், இறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

செய்யாறு தாலுக்கா வருவாய்த் துறையினர் செய்யாறு துணை கலெக்டர் ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2023 1:36 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  2. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  3. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  4. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  5. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  6. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  7. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
  8. சினிமா
    Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
  9. தூத்துக்குடி
    முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
  10. லைஃப்ஸ்டைல்
    egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...