/* */

செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா

செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா
X

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி,  விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினர். தாசில்தார் சுமதி வரவேற்றார். திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் என்.வி.பாபு, திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, பங்கேற்று விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, கணனி மையம் மூலம் எல்லா ஆவணங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டத்தை முதன் முதலில் நமது முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். தற்போது ஊழலுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற நிலையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியவர் நமது கலைஞர் தான் இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்து மக்கள் பாராட்டும் அளவிற்கு பணி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக தாசில்தார் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

Updated On: 15 Jun 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு