/* */

தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 9 லட்சம் கையாடல் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சொப்பனத்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த கடன் சங்கத்தில் விவசாயிகளின் சேமிப்பு கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட பதிவாளருக்கு புகார்கள் சென்றன.

இதனையடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களின் மாவட்ட இணை பதிவாளர் நடராஜன், துணைப் பதிவாளர் வசந்த லட்சுமி ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் உர விற்பனையாளர் வெங்கடேசன் மற்றும் விற்பனையாளர் விஜயன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 9 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. மாவட்ட இணை பதிவாளர் துணைப்பதிவாளர் பரிந்துரையின் பேரில் சீனிவாசன், வெங்கடேசன் ,விஜயன் ஆகிய மூன்று பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 1 July 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!