/* */

கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு

தண்டராம்பட்டு அருகே கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை என ஊர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கால்நடைகளை மர்ம விலங்கு தாக்கவில்லை: ஊர் நிர்வாகம் அறிவிப்பு
X

உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதை யாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக 15-க்கும் மேற்பட்ட ஆடு, கன்று குட்டிகளை மர்ம விலங்கு கடித்து வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை ஏழுமலை என்பவருடைய நிலத்தில் கன்று குட்டிகளை 5 வெறிநாய்கள் கடித்து கொண்டிருப்பதை தாயுமானவர் என்பவர் பார்த்து வெறி நாய்களை கல்லால் விரட்டி உள்ளார்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், வனவர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து வெறி நாய்கள், ஆடு மாடுகளை கடிப்பதாகவும், மர்ம விலங்கு ஏதும் இல்லை என்றும் உரிமையாளர்கள் கால்நடைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மர்ம விலங்கு குறித்த பயம் நீங்கியது.

Updated On: 14 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!