/* */

50 ஆண்டுகளுக்குபின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர்.

HIGHLIGHTS

50 ஆண்டுகளுக்குபின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
X

அரசு நிதி உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, ஆரணி

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி பழமையான பள்ளியாக விளங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1970-71-ம் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு படித்த 70 முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் இந்த மாணவர்கள் படித்தபோது அவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர்களும் கலந்து கொண்டனர். அவர்களது காலில் முன்னாள் மாணவர்கள் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் தற்போதுள்ள தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகிகளும் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னாள் மாணவர்கள் 70 பேரும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாவர். தொழில் அதிபர்களாகவும் பலர் உள்ளனர். சென்னை ,பெங்களூரூ, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கோவை, திருச்சி, வேலூர் உள்பட பல்வேறு ஊர்களில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

தாங்கள் படிக்கும்போது பள்ளியில் எங்கு அமர்ந்தோம், எப்படி பழகினோம், அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு பேசி மகிழ்ந்தனர். இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடத்தி இன்றுதான் நிறைவு பெற்றது என முன்னாள் மாணவர்கள் மனமகிழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிக்கும் முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்.

Updated On: 3 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...