/* */

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

முன் அறிவிப்பு இன்றி ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
X

கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் முன்னறிவிப்பின்றி ஆட்கள் குறைப்பில் ஈடுபட்ட தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை முன் வாயிலில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக 13 நபர்களை முன்னறிவிப்பின்றி பணியிலிருந்து நிறுத்தப்பட்டதால் மூன்று நாட்கள் நடைபெற்ற தொடர் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அதேபோல் மீண்டும் திடீரென முன்னறிவிப்பின்றி 4 தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னறிவிப்பு மற்றும் முறையான காரணமின்றி நிறுத்தப்பட்ட 4 தொழிலாளர்களை பணியமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தொழிலாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

Updated On: 4 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!