/* */

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது
X

பைல்படம்

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(27). பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் அவரது நண்பர் வீடு உள்ளது. நண்பரின் வீட்டுக்கு சென்றபோது, அவரது 16 வயது தங்கைக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

நண்பரின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பாலகிருஷ்ணன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவியின் பெற்றோர் இராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா