Begin typing your search above and press return to search.
கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக்: ஒரே நாளில் ரூ.6.15 கோடிக்கு மது விற்பனை
கொரோனா ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் சனிக்கிழமையே, தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர்.
சனிக்கிழமை மாலை முதல் இரவு 10 மணிவரை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 189 மதுக்கடைகள் உள்ளன. வழக்கமான சனிக்கிழமைகளில் இந்த கடைகளில் ரூ.3.5 கோடிக்கு மது விற்பனைநடைபெறும்.
ஊரங்கால் இந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 16 லட்சத்து 21 ஆயிரத்து 410க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.